யார் இந்த அம்ரித்பால் சிங் ?. நேற்று முதல் முடங்கிய இணையதள சேவை - பரபரப்பில் பற்றி ஏரியும் பஞ்சாப் மாநிலம்

x

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், ஷாகோட் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஊர்வலமாக சென்றார். அப்போது கைது செய்ய முயன்ற போலீசாரின் பிடியில் இருந்து, அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்ரித்பால் சிங்கை தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பை சேர்ந்த 78 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை முடக்கப்பட்ட நிலையில், மக்கள் வதந்திகளை நம்பாமல் அமைதி காக்க வேண்டும் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்