சபரிமலையின் புதிய மேல்சாந்தி யார்? - ஐயப்பன் சன்னதி முன் நாளை நடக்கும் குலுக்கல் முறை தேர்வு

x

சபரிமலையின் புதிய மேல்சாந்தி யார்? - ஐயப்பன் சன்னதி முன் நாளை நடக்கும் குலுக்கல் முறை தேர்வு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ள நிலையில், நாளை மேல்சாந்தி தேர்வு நடைபெறவுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 22 ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதனிடையே சபரிமலை மேல்சாந்தியாக இருக்கும் பரமேஸ்வரன் நம்பூதிரியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, புதிய மேல்சாந்தியின் தேர்வு, நாளை ஐயப்பன் சன்னதியின் முன் குலுக்கல் முறையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்