இந்தியாவில் யார் யாருக்கு புதிய வகை கொரோனா? - மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியல்

x

கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஜனவரி 3 வரை வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் விமான நிலையத்தில் 19 ஆயிரத்து 227 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அவர்களின் ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 40 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 14 பேருக்கு Xbb வகையும், ba 5.2 இரண்டு நபர்களுக்கும், கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்