யார் முதலில் போவது? அரசு - தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு

x

கரூரில் பேருந்து இயக்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில், அரசு பேருந்து ஓட்டுநருடன் தனியார் பேருந்தின் ஓட்டுநர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேரத்தில் கரூர் நோக்கி சென்றுள்ளன.

இந்நிலையில், ஒருவரை ஒருவர் முந்தி செல்வது தொடர்பாக ஓட்டுநர்களுக்கு இடையே போட்டி நிலவியதாக தெரிகிறது.

கரூர், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில், அரசு பேருந்தை மறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி, கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்