"நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பியது யார்" - அதிகாரிகள் மேல் சாடிய அமைச்சர்

x

காட்பாடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். விளையாட்டு அரங்கத்தில் கட்டப்பட்ட நீச்சல் குளம் இதுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆய்வுக்கு அழைத்து, தேவையான நிதிகளை பெறலாம் என, அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், பராமரிப்பின்றி காணப்பட்ட நீச்சல் குளத்தில், தண்ணீரை நிரப்பியது யார் என கேட்டு, அதிகாரிகளை சாடினார். மேலும், சென்னையில் உள்ள விளையாட்டுத்துறை உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், அவரை கடுமையாக சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்