வெளுத்து வாங்கிய 'பேய்' மழை... அடுத்தடுத்து இடிந்து விழுந்த வீடுகள் - துடி துடித்து பலியான 22 பேர்

x

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானின் வார்டாக் மாகாணத்தில் சாக், ஜகோதா உள்ளிட்ட பல நகரங்களில் கனமழையால் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததுடன் வீடுகள் பல இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்