போதை கடத்தல் விவகாரம்.. பாகிஸ்தானியர் எங்கு கைதானார்? - போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் கண்டனம்

x

கொச்சி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு எர்ணாகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 13ஆம் தேதி 2 ஆயிரத்து 525 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுபைர் என்ற பாகிஸ்தானியரை கைது செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுக்க எர்ணாகுளம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மனு தாக்கல் செய்த‌து. குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானியர் எங்கு கைது செய்யப்பட்டார் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்திய கடல் எல்லைக்குள் இருந்தால்தான் இந்திய சட்டங்கள் செல்லும் என்று கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்