"எங்கே நிம்மதி.. எங்கே நிம்மதி" டவரில் ஏறி வயிற்றில் அடித்து கதறிய ஆசாமி - நொந்துபோன போலீசார்

x

கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவர் மீது மது போதையில் ஏறிய பிரபாகர் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை மிரட்டல் விடுத்து கதறினார்.

5 மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்க மறுத்த அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .

இறுதியில் மதுபாட்டிலும், உணவும் வாங்கி தந்தால் இறங்கி வருவதாக அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவற்றை வாங்கி கொடுத்தபின் மதுபோதை நபரை தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் மீது ஏறி, கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்