தெலுங்கானா ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் எங்கே? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி

x

தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூரில், நிர்மலா சீதாராமன் ரேஷன் கடைகளுக்கு சென்று, கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஏன் காணவில்லை என்று சிவில் சப்ளைஸ் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், எவ்வளவு ரேஷன் அரிசிக்கு மத்திய அரசின் பங்கு வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.மாவட்ட ஆட்சியர் தெரியாது என கூறினார்.

ஆட்சியரிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால் வேதனை தெரிவித்த சீதாராமன், அரை மணி நேரத்தில் விவரத்தை கண்டறிந்து தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்