விநோத நோய்களால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள்...சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

x

விநோத நோய்களால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள்...சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்


விநோத நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு, உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விமல், சீதா தம்பதியினருக்கு முதல் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், அடுத்து பிறந்த பெண் மற்றும் ஆண் குழந்தைகள் விநோத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2 குழந்தைகளையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் உதவுமாறு கோரிக்கை வைத்தனர். 2 குழந்தைகளுக்கும் சக்கர நாற்காலிகளை வழங்கி ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர், உடனடியாக குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்