"உடனே வேலைய விடணும்னா அவங்க என்னங்க பண்ணுவாங்க" - பேராசிரியர்களுக்காக கொதித்தெழுந்த மாணவர்கள்

x

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் புளியங்குடி, சேரன் மகாதேவி, சாத்தான்குளம், நாகம்பட்டி, திசையன் விளை, பணகுடி ஆகிய பகுதிகளில் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பேராசிரியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறி உறுப்பு கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல், தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன்மணியம் கல்லூரியில், 27 பேராசிரியர்களையும், நிர்வாகத்தினர் பணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்