ஊராட்சி மன்ற தலைவரின் சகோதரர் அரசு பேருந்து சீட்டில் செய்த காரியம்.. தட்டிக்கேட்ட ட்ரைவரை தாக்கிய கும்பல் - தீயாய் பரவும் வீடியோ

x

திருப்பத்தூரில் அரசு பேருந்து ஓட்டுரை, ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கட்டேரி ஊராட்சிமன்ற தலைவர் மாதவனின் சகோதரர் என கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில், மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் முருகன் படுத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் பெண் பயணிகள் பேருந்தில் நின்று கொண்டு வந்ததால், பேருந்து ஓட்டுநர் சுதாகர் தட்டிக்கேட்டுள்ளார். இதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஊராட்சி மன்ற தலைவரான மாதவனுக்கு முருகன் போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெங்களாபுரம் அருகே பேருந்தை மறித்த ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் 10 பேர், பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்