மகனுக்கு தெரியாமல் அப்பா செய்த காரியம்.. சொந்த வீட்டின் மீதே வெடிகுண்டு வீசிய மகன் - சென்னையில் பயங்கரம்...

x

சென்னை பெரும்பாக்கத்தில் நிலத்தை விற்று தந்தை பணம் தராததால், வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசிய மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம், தனக்கு சொந்தமான நிலத்தை விற்றுள்ளார். அந்த பணத்திலிருந்து, 3 லட்ச ரூபாய் கேட்டு அவரது மகன் அருண் தகராறு செய்துள்ளார். தந்தை பணம் தர மறுத்ததால், அருண் தனது மைத்துனர் பிரவீன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு சென்று விட்டார். இதில் அருணின் சித்தப்பா வெற்றி வேந்தன், தங்கை ரேகா ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்