கேரள இளைஞர்கள் செய்த காரியம்..சென்னை கோர்ட்டின் உச்சபட்ச தண்டனை

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சென்னை வந்த காரில், ரோந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்து 4 பாட்டில் கஞ்சா எண்ணெயை கைப்பற்றிய போலீசார், கேரளாவை சேர்ந்த ஆதில்மோன், அஜில் சத்யான் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்