"என்னடா கேட்ட.. பானி பூரிக்கு பணமா?"... கடைக்காரரின் செவுலை திருப்பி பணம் பறித்த கும்பல் - சுற்றி வளைத்த போலீசார்

x

பானி பூரிக்கு பணம் தர மறுத்து கடையின் உரிமையாளரை தாக்கியதோடு, கடையிலிருந்த பணத்தையும் பறித்து சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அமைந்தகரையில் தேவி என்ற பெண் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 4 பேர் பானி பூரி சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் தேவியை ஆபசமாக பேசி தாக்கியதோடு, கடையிலிருந்த பணத்தையும் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். கைதான நால்வர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்