ஆஹா என்ன மனுஷன்யா..! ஆட்டுக்கு ரெயின் கோட் போட்ட விவசாயி

x

தஞ்சாவூர் மாவட்டம் குலமங்கலம் அருகே, விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு ரெயின் கோட் அணிவிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாந்தோணி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

தற்போது குளிர் காலம் என்பதால், பிளாஸ்டிக் சாக்குகள் மூலம் ரெயின் கோட் போல் ஆடை வடிவமைத்து, அதனை ஆடுகளுக்கு போர்த்தி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்