களைகட்டிய கார் கண்காட்சி...பழமையான கார்களை ஓட்டி அசத்திய டிஜிபி சைலேந்திரபாபு

x

இன்னும் ஒரு கார் வாங்கவில்லை, ஆனால் நான் பிறக்கும் முன்னர் ஓடிய சொகுசு காரை சென்னையில் ஓட்டினேன் என்று டிஜிபி சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பயன்படுத்திய கார் கண்காட்சி இரண்டு நாட்களாக சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திரபாபு, பழமையான கார்களை ஓட்டினார்.

இது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் இன்னும் ஒரு கார் வாங்கவில்லை, ஆனால் நான் பிறக்கும் முன்னர் ஓடிய சொகுசு காரை இன்று ஓட்டினேன் என்று பதிவிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஓடிய கார்களை கவனிக்க தவறாதீர்கள் என்றும் அவர் தமது பதிவில் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்