DJ-வால் 2 ஆன கல்யாண வீடு..பொண்ணை தூக்கிட்டு ஓடிய மாப்பிள்ளை..எதுக்கும் அசராமல் பரோட்டா போட்ட மாஸ்டர்

x


கன்னியாகுரியில், திருமண மண்டபத்தில் உறவினர்கள் மோதலின்போது, மேடையில் மணப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... முகூர்த்த விழவில் உறவினர்கள் முட்டிக்கொண்டது ஏன் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு...

திருமண நிகழ்ச்சியில் நடந்த குத்தாட்டத்தில், மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே தகராறு... அடித்து உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள்... மேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்... மணப்பெண்ணை தோளில் சுமந்து சென்ற மணமகன்... எதனையும் கண்டுகொள்ளாமல் போட்ட பரோட்டாவையே திருப்பி திருப்பி போட்ட பரோட்டா மாஸ்டர் என திருமண மண்டபமே போர்க்களம் போல் மாற்றியுள்ளது இந்த சம்பவம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதே பகுதியை சேர்ந்த மணமகனுக்கும், ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்த மணமகளுக்கும் இடையே திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு அதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது.

திருமண மண்டபத்தில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரைச் சேர்ந்த உறவினர்கள் ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில்,

வரவேற்பு நிகழ்ச்சியை குஷிப்படுத்த நினைத்த மணமகள் தரப்பு உறவினர்கள், மதுபோதையில் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இவர்களின் குத்தாட்டத்தை மண்டபத்தில் இருந்தவர்கள் ரசித்த வண்ணம் இருக்க, நல்லத்தானே போய்ட்டு இருக்குனு அங்கிருந்தவர்கள் நினைத்தபோது எதிர்பாரா விதமாக ஒரு மோதல்...

பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய இளைஞர்கள், அங்கு நின்றிருந்த மணமகன் வீட்டாரைச் சேர்ந்த பெண்கள் மீது மோதியுள்ளனர்.

இதனை தட்டிக் கேட்டபோது, இரு வீட்டாரைச் சேர்ந்த உறவினர்கள், ஒருவரை ஒருவர் சரமாரியாக வார்த்தையால் வசைபாடியுள்ளனர்.

வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதில், மண்டபத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் காவல்நிலையத்திற்கு தகவல் போய் சேர, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், சண்டை ஓய்ந்தபாடில்லை...

திருமண மேடை மீது நின்றபடி, கலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த மணப்பெண், திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி... தூக்கிடுற கைப்புள்ளனு, மணமகனே மணப்பெண்ணை தனது தோளில் சுமந்தபடி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்...

வேடிக்கை என்னவென்றால்... மாப்பிள்ள இங்க நடந்துட்டு இருக்கு... நீ பாட்டுனு டீ ஆத்திட்டு இருக்கேனு... வடிவேலு காமெடி போல... இவ்வளவோ கலவரத்திலும், பரபரப்பா பரோட்டா மாஸ்டர் பரோட்டாவை தட்டியதுதான் வியப்பை ஏற்படுத்தியது....

மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரின் மோதலால், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, யாரையும் வரவேற்காத சூழலை ஏற்படுத்தியதுதான் மிச்சம்...


Next Story

மேலும் செய்திகள்