"DMS வளாகத்தை முற்றுகையிடுவோம்" - ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

x

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி சென்னை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என, ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஒப்பந்த செவிலியர்கள் சங்க பொது செயலாளர் சிபின், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், இது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றார். பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இது வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்