“பொத்தி பொத்தி அழகு பார்த்து பாதுகாக்க வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்

x

திசையன்விளை அருகே உள்ள அரசூர் எம்எல் தேரி பகுதிக்கு வருகை தந்த அவர், நதி நீர் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக குளம் மற்றும் வெள்ளநீர் கால்வாய் பணிகளை பொறியியல் வல்லுநர்கள் உதவியுடன் வரைப்படங்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்குள் நதி நீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வை முடித்த பின் இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நினைவு இல்லத்திற்கு அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வருகை தந்தனர். அங்குள்ள தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு அவரது நினைவு இல்லத்தையும், அவர் பயன்படுத்திய பொருட்களையும் பார்வையிட்டார். அங்குள்ள வருகை பதிவேட்டில் அமைச்சர் துரைமுருகன் கடைசி தமிழன் உள்ளவரை உன்னை நினைவு படுத்துவோம் என கைப்பட எழுதி கையெழுத்திட்டார்.


Next Story

மேலும் செய்திகள்