“15 ஆண்டுகளாக மூக்கை பிடித்து நடக்கிறோம்.. கோடி கோடியாய் கொட்டியும் இப்படியா?“ - குமுறும் மாநகராட்சி மக்கள்

x

திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 15 ஆண்டுகளாகியும் முழுமையடையாத சூழலில் அங்கிருக்கும் மக்களின் தவிப்பை விவரிக்கிறது இந்த தொகுப்பு

எங்கு திரும்பினாலும் பாதாள சாக்கடை நீர் பொங்கி ஆறாக ஓட... மூக்கை பிடித்துக்கொண்டு மக்கள் நடக்கும் காட்சியை திண்டுக்கல் மாநகராட்சியில் காணலாம்...

திண்டுக்கல் முதல்நிலை நகராட்சியாக இருந்த போது 2007-ல் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் 15 ஆண்டுகளாக முழுமை அடையாமல் உள்ளது.

முதல்கட்டமாக 46 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 22 வார்டுகளில் பணி தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட போது 2014-ல் தந்தி டிவி உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சியில் நிலையை விவரித்தது. இதனையடுத்து வேகமெடுத்த பணிகள் பின்னர் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

பணிகள் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை 13 வார்டுகளில் திட்டம் நிறைவடைந்துள்ளது. 11 வார்டுகளில் பகுதியாக முடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முறையான திட்டமிடல் இல்லாத திட்டத்தால் துளியும் பயனில்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் மக்கள்

இதற்கு பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட குழாய்கள் மிக சிறியது என காரணம் சொல்கிறார் பாஜக கவுன்சிலர் தனபால்...

மறுபுறம் கழிவுநீரை வெளியேற்றும் உந்து நிலையங்களில், பம்பிங் சிஸ்டம் சரியாக இயங்கவில்லை என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசன்.

இப்படி பல்வேறு சிக்கல்களை மக்கள் சொல்ல மீதம் உள்ள 24 வார்டுகளில் எப்போது பணி தொடங்கும் என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

இருப்பினும் 205 கோடி ரூபாயில் அங்கு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கிறார் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்

ஆனால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு இன்னும் தமிழக அரசிடம் இருந்து நிதி வரவில்லை என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

திண்டுக்கல் 2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான பயன் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கிறார்கள்.

சுற்றியுள்ள 10 கிராம பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், போதிய மக்கள் தொகை இல்லை என ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலிருந்து திண்டுக்கல் விடுபட்டது. இதை அரசு கவனிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்...

நகரில் இப்போது மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் இனி பெரிய குழாயாக பதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள் திண்டுக்கல் மக்கள்....


Next Story

மேலும் செய்திகள்