"4 கி.மீ தூரம் நடக்கிறோம்..படிக்க முடியல..” கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்

x

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக்கோரி, பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உத்தரகோசமங்கை மேல்நிலை பள்ளியில், கே. கொடிக்குளம், புத்தேந்தல், வெண்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள், பள்ளிக்குச் செல்ல 4 கிலோமீட்டர் வரை நடந்து செல்ல வேண்டி இருப்பதாகக் கூறி, பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்