மலைப்பாதையில் தோன்றிய அருவி - அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

x

மலைப்பாதையில் தோன்றிய அருவி - அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, மல்லியம்மன் கோயில் அருகே மலைப்பாதையில் புதிய அருவி ஒன்று தோன்றியுள்ளது. இதில், மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. மலைப்பாதையிலேயே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. இதையடுத்து, அருவியில் வெள்ளம் குறைந்த பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.


Next Story

மேலும் செய்திகள்