கொள்ளை போனது100 சவரனா இல்லை 200 சவரனா..? - குழம்பிய போலீசார் - திருவாரூரில் அதிர்ச்சி கேஸ்

x

திருத்துறைப்பூண்டி எடத்தெருவை சேர்ந்த மருத்துவர் பிரேம்குமார் தாமஸ், பணி நிமிர்த்தமாக சென்னை சென்ற போது, அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள் மற்றும் பல லட்ச ரூபாய் திருடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இருந்து வீடு திரும்பிய மருத்துவர் பிரேம்குமார் தாமஸ், திருடு போன பொருள்கள் குறித்து கணக்கீடு செய்தார். அப்போது ஒரு பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள் 2 லட்ச ரூபாய் ரொக்கம் திருடுபோனதும், மீதமுள்ள நகைகள் மற்றும் ரொக்கம் மற்றொரு பீரோவில் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்