மழையால் சுவர் இடிந்து விழுந்து கோர விபத்து - குடும்பத்தினருக்கு உறுதியளித்த அமைச்சர்

x

சென்னை சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளான குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.நெருப்பு மேட்டை சேர்ந்தவர் கேசவ வேல். மாற்றுத் திறனாளியான இவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே புதிய 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் சுவர் 2 தினங்களுக்கு முன் பெய்த மழையால் இடிந்து கேசவ வேலின் வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் மூன்று வயது கிருத்திகா படுகாயம் அடைந்துள்ளார். 6 மாத குழந்தையை காப்பாற்ற தாய் லட்சுமி குழந்தையைக் கட்டி அணைத்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கேசவவேல் மற்றும் லட்சுமி ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தை கிருத்திகா எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரப்பில் மற்றும் தனிப்பட்ட முறையில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்