விளையாட சென்று பெட்டியில் பிணமாக ஊர் திரும்பிய தமிழக வீரர்

x

நேபாளத்தில் உயிரிழந்த வாலிபால் வீரர் ஆகாஷின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபால் வீரரான ஆகாஷ், கடந்த 21ம் தேதி வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள நேபாள நாட்டிற்கு சென்றார்.

அப்போது, அங்கு விளையாடிய போது திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அப்போது, ஆகாஷ் உடலுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்துக்கு வாலிபால் வீரர் ஆகாஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, திருவள்ளூர் எம்.எல்.ஏ. விஜி ராஜேந்திரன் அலுவலகத்தில் இருந்து, இரு சக்கர வாகனங்கள் படைசூழ உடலை கொண்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்