டாஸ்மாக் ஊழியர்களை வீச்சரிவாளால் சரமாரியாக தாக்கிய மாஸ்க் கொள்ளையர்கள்.. 6 லட்சம் அபேஸ்- அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x
  • விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், டாஸ்மாக் ஊழியர்களை முகமூடி கொள்ளையர் அரிவாளால் தாக்கி, 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளன.
  • திருச்சுழி குண்டாறு பள்ளிமடம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில், கடந்த இரு தினங்களாக மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
  • இதனை கண்காணித்த மர்ம கும்பல், இரவு வரை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திடீரென கடைக்குள் நுழைந்தது. தடுக்க முயன்ற விற்பனையாளர் பூமிநாதனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
  • . இதையடுத்து, மீதமுள்ள ஊழியர்களை பீர்பாட்டிலால் மர்ம நபர்கள் தாக்கினர்
  • . ஊழியர்களிடம் இருந்த 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய், சேல்ஸ்மேன் கையில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 செல்போன்களை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.
  • இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்