அப்பாவை காணும்.. ஆட்சியரிடம் அழுத சிறுமி - மடியில் அமர்த்தி ஆறுதல் சொன்ன ஆட்சியர்

x

விருதுநகரில் நடைபெறும் புத்தக திருவிழாவில், பெற்றோரை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் நான்கு வயது சிறுமி வேண்டுகோள் விடுத்தார். கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில், புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அப்போது, நான்கு வயது சிறுமி அழுததை கண்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, குழந்தையை தனது மடியில் அமர வைத்து குடிநீர், பிஸ்கட் கொடுத்தார். பின்னர் குழந்தையிடம் விசாரித்த போது, கூட்டத்தில் காணாமல் போன பெற்றோரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தது. இதனிடையே, பெற்றோரை கண்டுபிடித்த போலீசார், குழந்தையை ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்