வேங்கை வாழ்ந்த காட்டிலே...சச்சினை சந்தித்த கோலி ..இணையத்தை அதிர விட்ட புகைப்படம்

x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் பெங்களூரு வீரர் விராட் கோலி மகிழ்ச்சியாக கலந்துரையாடி உள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இதற்காக பெங்களூரு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது சச்சினை சந்தித்து கோலி பேசினார். இருவரும் மகிழ்ச்சியாக கலந்துரையாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, இந்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள பெங்களூரு அணி, ஒரே புகைப்படத்தில் 59 ஆயிரத்து 679 சர்வதேச ரன்கள், 175 சதங்கள், மில்லியன் நினைவுகள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்