வட மாநிலத்தவர் பற்றி பொய் வீடியோ... பீகார் தொழிலாளியை தொக்காக தூக்கிய தமிழக போலீஸ்

x
  • வட மாநிலத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் குமார் என்பவரை, பீகாரில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
  • பீகார் மாநிலம் ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்து வரும் பிரசாந்த் குமார் என்பவர், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, இணையத்தில் பொய்யான வீடியோ பதிவிட்டார்.
  • தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இது வரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பீகாரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமாரிடம் தமிழக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்