தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை... "கண்டிப்பாக இது அபாண்டமான பழி" - சுகாதார ஆய்வாளர் பேசிய பரபரப்பு ஆடியோ

x
  • நெல்லை மாவட்டம் திசையன்விளையில், பெண் தூய்மை பணியாளருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சுகாதார ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
  • நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில், தூய்மைப் பணியாளராக உள்ள பெண்ணிடம், சுகாதார ஆய்வாளர் நவராஜ் என்பவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • பின்னர், வெளியில் கூறினால், வேலையை விட்டு நீக்கி விடுவதாக பெண் தூய்மைப் பணியாளரை நவராஜ் மிரட்டியுள்ளார்.
  • இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 4ம் தேதி புகார் அளித்தார்.
  • அதன் பிறகு, கடந்த 18ம் தேதி, தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திசையன்விளை பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • அதனைத் தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் நவராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
  • இந்த குற்றச்சாட்டுக்கு நவராஜ் மறுப்பு தெரிவித்த ஆடியோ வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்