தேயிலை தோட்டத்தில் திடீரென புகுந்த காட்டு யானைகளின் வைரல் வீடியோ | Elephant | Nilgiris |

x

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கூடலூர் அருகே 10-க்கும் மேற்பட்ட யானைகள் சாலையை கடந்து அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்க்குள் புகுந்தது. இந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்பிரியா சாகு அதனை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு 'மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழ்வது இந்தியாவில் மட்டும் தான் எனக் கூறியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்