மணிப்பூரில் உக்கிரமடையும் வன்முறை...! - கோரிக்கை விடுத்த மேரி கோம்

x

மணிப்பூர் வன்முறை சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றிரவு முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வன்முறையில் சிலர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள மேரி கோம், விரைவில் நிலைமை சீரடைய வேண்டுமென்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்