விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்... மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..!

x

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து 1800 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பிச்சி பூ 800 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 1000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்து, பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பூக்களின் விலை உயர்ந்தாலும்,பூக்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்