"எல்லாம் அவளுக்காக தான்"...காதலர் தினத்தை கொண்டாட ஆடு திருடி தர்மஅடி வாங்கிய காதலன் - காதலியால் கம்பி எண்ணும் சோகம்

x

விழுப்புரத்தில், காதலர் தினம் கொண்டாடுவதற்காக, ஆடு திருடிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கண்டாச்சிபுரம் பகுதியில், ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்றினை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர். இதனைக் கண்ட ரேணுகா கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் இருசக்கர வாகனத்தை விரட்டிப் பிடித்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், கல்லூரி மாணவன் அரவிந்தன் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், காதலர் தினம் கொண்டாட பணம் இல்லாததால், ஆட்டை திருடியது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்