வீட்டின் கதவை தட்டி கொள்ளை...தெருக்களில் சுற்றி திரியும் கும்பல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

விழுப்புரத்தில், மர்ம கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி. நகரில், நள்ளிரவில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளின் கதவை தட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வீட்டின் உரிமையாளர்கள் விளக்கை போட்டபடி வெளியே வந்ததால், கும்பல் தப்பியோடி உள்ளது.

அதே கும்பல், தெருவில் வந்தவர்களை மிரட்டி கொள்ளை அடிக்க முயற்சி செய்த நிலையில், அவர்கள் கூச்சல் போடவே மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது.

இது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்