பெண்ணிடம் 9 ரூபாய் கொள்ளையடித்து 40 ஆயிரத்தை இழந்த சூப்பர் மார்க்கெட் - வேற லெவல் சம்பவம்..!

x

9 ரூபாய்க்கு கேரி பேக் (carry bag) கொடுத்து, பில் வழங்க மறுத்த பல்பொருள் அங்காடிக்கு, நுகர்வோர் நீதிமன்றம் நூதன தீர்ப்பு அளித்துள்ளது.

விழுப்புரத்தில் செயல்படும் சூப்பர் மார்கெட் ஒன்றில், லாவண்யா என்பவர் கடந்த ஆண்டு மளிகைப் பொருட்களை வாங்கியுள்ளார்.

அப்போது, கடை ஊழியர்கள் 3 கேரி பேக் சேர்த்து ஆயிரத்து ஒரு ரூபாய் பில் என தெரிவித்துள்ளனர்.

இந்த தொகையை லாவண்யா வழங்கியுள்ளார்.

ஆனால், கடை ஊழியர்கள் வழங்கிய பில்லில் கேரி பேக்கிற்கான 9 ரூபாய் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து தெரிவித்தும், ஊழியர்கள் முறையான பதில் அளிக்காத நிலையில், அவர் விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த ஆணையம், 9 ரூபாயை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேலும், மனுதாரரின் மன உளைச்சல் இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க, அந்த சூப்பர் மார்கெட்டிற்கு உத்தரவிட்டது.

மேலும் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அபராதமாக 25 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்