விழுப்புரத்தில் அதி பயங்கரம்.. சூப்பர் மார்கெட்டில் இருவருக்கு கத்திக்குத்து.. ஒருவர் பலி - அதிர்ச்சி காட்சிகள்

x
  • விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இப்ராஹீம் என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார்.
  • உடல் நிலை சரியில்லாமல் கடைக்கு செல்லாத நிலையில், நேற்று மளிகை பொருள்கள் வாங்க தான் பணிபுரியம் கடைக்கு சென்றுள்ளார்.
  • அப்போது ஒரு பெண்ணிடம், இரண்டு இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
  • இதனை பார்த்த இப்ராஹீம் மற்றும் தீபக் ஆகிய இருவர், அந்த இளைஞர்களிடம் தட்டி கேட்டுள்ளனர்.
  • இதில், ஆத்திரமடைந்த இளைஞர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளனர்.
  • இதில், இப்ராஹீம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்த நிலையில், தீபக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து, கொலையில் ஈடுபட்ட ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்