"முக்குலத்தோர் வாக்குகளை பிரதமர் குறிவைக்கிறார்" - விழுப்புரம் எம்பி ரவிக்குமார்

x

சாதி ரீதியில் மக்களை பிளவுப்படுத்தி, அரசியல் லாபம் பார்ப்பதற்காகவே பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வருவதாக விழுப்புரம் எம்பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி, பிரதமராகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதுதான் தேவர் குருபூஜைக்கு வர வேண்டும் என்று புரிந்ததா என கேள்வி எழுப்பினார். தேவேந்திர குல வேளாள மக்களை பட்டியலிருந்து நீக்கி சட்டம் இயற்றுவதாக கூறி, அதனை நிறைவேற்றாமல் முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து தேவர் குரு பூஜையில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தென் மாவட்ட மக்கள் பாஜகவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்