தலைக்கேறிய போதையால் தாறுமாறாக லாரியை ஓட்டிய ஓட்டுநர்... ஓடும் லாரியில் தொற்றிக் கொண்டு சென்ற இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்
- விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே லாரி ஓட்டுநர் குடிபோதையில் தாறுமாறாக லாரி ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏறடுத்தியது.
- புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை அதன் ஓட்டுநர் குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
- இதைப் பார்த்த அப்பகுதியினர் லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் விரட்டிச் சென்று கூறியுள்ளனர்.
- மேலும், இளைஞர் ஒருவர் ஓடும் லாரி மீது தொற்றிக் கொண்டு லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
- இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
- இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
Next Story