ஒழுங்கீனமாக நடந்தாக ஏட்டம்மா பணியிட மாற்றம் - அதிரடி நடவடிக்கை எடுத்த விழுப்புரம் டி.ஐ.ஜி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில், பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட புகாரில், பெண் தலைமைக்காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சின்னசேலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் சுதா, பணியின்போது உரிய சீருடை இல்லாமலும், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் வந்தன. இதன்பேரில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்திற்கு பணியி​ட​ மாற்றம் செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்