குப்பைக் கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு..காலில் விழுந்தும், தலையில் அடித்துக் கொண்டும் கதறல்

x

திருவண்ணாமலை அருகே குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காலில் விழுந்து கிராம மக்கள் கதறி அழுதனர். தேவனந்தல் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேவனந்தல் அருகே குப்பைக் கிடங்கு அமைக்க கூடாது என கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி முனுசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவருடைய காலில் விழுந்தும், தலையில் அடித்துக் கொண்டும் கதறி அழுது பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்