விடிய விடிய காதலி வீட்டு முன் காதலன்.. வெளியே வந்த பெண்..அடுத்து நடந்த திக் திக் -முட்புதரில் காதலன் செய்த பயங்கரம்

x
  • விழுப்புரம் அருகே திடீரென பேச மறுத்த காதலியை, காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் இளம்பெண் தரணி.
  • இவர், செவிலியராக பயிற்ச்சி பெற்று வந்த நிலையில், மதுரப்பாக்கத்தை சேர்ந்த கணேசன் என்பவரை மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், இவர்களது காதல் பெண்ணின் வீட்டார்க்கு தெரியவரவே, பெண்ணை பெற்றோர் கண்டித்ததாகவும், இதனால், கணேசனுடன் பெண் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது
  • . இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த கணேசன், அதிகாலை விடியும் முன்பே காதலி வீட்டின் அருகேயுள்ள முட்புதரில் பதுங்கியுள்ளார்.
  • அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்த காதலியை கணேசன் கழுத்தறுத்து கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதனையடுத்து, முட்புதரில் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
  • உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்