அட்டகாசமான பாடல்களுக்குச் சொந்தக்காரர்... எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரன்.. நடிகராகவும் கலக்கும் விஜய் ஆண்டனி...

x

முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இன்று தனது 47வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழில் வெளியான முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் தான் விஜய் ஆண்டனி... சுக்ரன், டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், என பல படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர், நான், சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்து நாயகனாகவும் நடித்துள்ளார்... அட்டகாசமான பாடல்களுக்கு சொந்தக்காரரான விஜய் ஆண்டனிக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்