முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் காலமானார்

x

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான சரத் யாதவ் இன்று இரவு காலமானார். பாட்னா, முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான தனது 75வது வயதில் இன்று (ஜனவரி 12ஆம் தேதி) காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரத் யாதவ் 1999 மற்றும் 2004 க்கு இடையில் அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் பல்வேறு இலாகாக்களை வகித்தார். 2003 ஆம் ஆண்டில், ஜனதா தளம் ஐக்கிய ஜே.டி.(U) கட்சியின் சரத் யாதவ் தலைவரானார். 2004 மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்த பிறகு, நிதிஷ் குமார் அவருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்க உதவினார். 2009 இல், சரத் யாதவ் மீண்டும் மாதேபுராவிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2014 பொதுத் தேர்தலில் ஜனதா தளம் (U) தோல்வியடைந்த பிறகு, யாதவின் நிதிஷ் குமாருடனான உறவுகள் மோசமடைந்தன. 2017 பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.(யு) பாஜகவுடன் மீண்டும் இணைந்தபோது, சரத் யாதவ் பின்பற்ற மறுத்துவிட்டார், அதற்காக ஜே.டி.(யு) அவரை ராஜ்யசபாவில் இருந்து வெளியேற்ற முயன்றது. பின்னர், சரத் யாதவ் நிதிஷ் குமாருடன் பிரிந்து 2018 இல் தனது சொந்த கட்சியான லோக்தந்தரிக் ஜனதா தளத்தை (எல்ஜேடி) நிறுவினார். மார்ச் 2022 இல், யாதவ், முந்தைய ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, எல்ஜேடி கட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்