தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

x

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை | TN Rains

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,

கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் லக்கூரில் 14 செமீ மழை பதிவாகி இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்