ஸ்மார்ட்டாக தப்பிக்க நினைத்த கைதிக்கு மாவுக்கட்டு - வேலூரில் பரபரப்பு

x
  • வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கடந்த மார்ச் 5ஆம் தேதி ரஞ்சித் குமார் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • அவர்களில், ராம்குமார் என்பவருக்கு சிறைக்காவல் முடிந்த‌தால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
  • அப்போது, காவலர்களை தள்ளிவிட்டு, ராம்குமார் தப்பி ஓடினார்.பின்னர் அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
  • அப்போது கீழே விழுந்து காயமடைந்த‌தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  • அதே நேரத்தில், தப்பி ஓடியது தொடர்பாக, ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்