வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து தாய் வீட்டுக்கு சடலமாக திரும்பிய மகள்

x

காதல் திருமணம் செய்து கொண்ட மூன்று மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் ராஜேஷ்வரியும். ரங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் ஸ்ரீதரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ராஜேஷ்வரி மற்றும் ஸ்ரீதர் இருவரும், ஸ்ரீதரின் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

இதனிடையே, இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறில், ராஜேஷ்வரியை ஸ்ரீதர் அடித்ததாகத் தெரிகிறது. இது குறித்து ஸ்ரீதரின் தாயாரிடம், ராஜேஷ்வரி கூறியுள்ளார்பி

ன்னர், மறுநாள் காலை ராஜேஷ்வரி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். பல இடங்களில் ராஜேஷ்வரியை தேடியும் கிடைக்காத நிலையில், அருகிலிருந்த விவசாய கிணற்றிலிருந்து ராஜேஷ்வரி சடலமாக மீட்கப்பட்டடார்.

ராஜேஷ்வரியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு


Next Story

மேலும் செய்திகள்