வேலூரில் ஹிஜாப்பை கழற்ற வற்புறுத்திய விவகாரம்.. வீடியோ பதிவிட்டவர், பகிர்ந்தவர் என 7 பேர் கைது

x
  • வேலூர் கோட்டையில் ஹிஜாப் அணிந்த சில பெண்கள் தங்களது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்துள்ளனர்.
  • அப்போது, அந்த பெண்களை வழிமறித்த ஒருவர், ஹிஜாப்பை கழற்ற கோரி வற்புறுத்திய நிலையில், அவர்களின் அனுமதியின்றி வீடியோவும் எடுத்துள்ளார்.
  • இந்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அதை சிலர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
  • இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மற்றும் பகிர்ந்தவர்கள் என 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இதில் ஒருவர் இளம்சிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் போது குற்றவாளிகளின் பெயர்களை காவல்துறை தரப்பில் வெளியிடுவது வழக்கம்.
  • ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்? என்பது குறித்த எந்த தகவலையும் காவல் துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்