குருவாயூர் கோயிலில் கதகளி ஆடிய கலெக்டர்

x

குருவாயூர் கோவிலில் வயநாடு மாவட்ட ஆட்சியர் கதகளி நடனம் ஆடினார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியர் கீதா, கதகளி நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர்.

இதற்காக கோட்டக்கல் உண்ணி கிருஷ்ணன் என்பவரிடம் கதகளி நாட்டியம் பயின்றார்.

வயநாட்டில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றதும் அங்கு நடந்த வள்ளியூர் காவு ஆறாட்டு விழாவில் கதகளி நடனம் ஆடினார்.

இந்த நிலையில் அவர் புத்தாண்டு தினத்தையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் மீண்டும் கதகளி நடனம் ஆடினார்.

அந்த நாட்டியத்தில் அவர் தமயந்தியாக வேடம் அணிந்து, பெண்களுடன் நளினமாக ஆடிய கதகளி ஆட்டம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்